tamilnadu

img

சந்திரபாபு  நாயுடுவுக்கு நோட்டீஸ்

அமரவாதி:
ஆந்திர மாநிலம் அமராவதி நகரில், கிருஷ்ணா நதிக்கரையில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வசித்து வருகிறார். இந்நிலையில், இந்த வீடுசட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதனை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல, சுற்றுச்சூழல் விதி களுக்கு மாறாக கட்டப் பட்டிருக்கும் மேலும் 28 வீடுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.